விசாரணைக்கு அழைத்து சென்றதால் தீக்குளித்த பெண்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

 

விசாரணைக்கு அழைத்து சென்றதால் தீக்குளித்த பெண்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காந்தி நகரில் வசித்து வந்த தம்பதி பாண்டி- செல்வி. இதில் பாண்டி ஏற்கனவே திருட்டு வழக்கில் சிறையில் இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் போலீசார் திருட்டு நகை விற்ற வழக்கு ஒன்றில் செல்வியை விசாரிக்க அறந்தாங்கி காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் செல்வி போலீடாருடன் செல்ல மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அறந்தாங்கி காவல் நிலைய வாயிலில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

விசாரணைக்கு அழைத்து சென்றதால் தீக்குளித்த பெண்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

அதுமட்டுமில்லாமல், தீயுடன் காவல் நிலையத்துக்கு உள்ளேயும் செல்ல முயன்றுள்ளார். அதனைப் பார்த்த போலீசார் தீயை அணைத்து செல்வியை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்குள்ளாக அவரின் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60% தீக்காயங்களுடன் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.