டீசல் விலை உயர்வு.. வேறு வழியில்லை வேலை நிறுத்தம்.. சரக்கு வாகனங்கள் மிரட்டல்

 

டீசல் விலை உயர்வு.. வேறு வழியில்லை வேலை நிறுத்தம்.. சரக்கு வாகனங்கள்  மிரட்டல்

தினந்தோறும் அதிகரித்து வரும் டீசல் விலை உள்ளிட்ட எங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அனைத்து இந்திய மோட்டார் வாகன கூட்டமைப்பு மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்துள்ளது.

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் டீசல் விலை உயர்வு, டீசல் மீதான வரி அதிகரிப்பு மற்றும் இ-வே பில் நடைமுறையில் உள்ள சிக்கல் மற்றும் பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் எங்களுடன் மத்திய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் இல்லையென்றால் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று மத்திய அரசுக்கு ஏ.ஐ.எம்.டி.சி. எச்சரிக்கை செய்துள்ளது.

டீசல் விலை உயர்வு.. வேறு வழியில்லை வேலை நிறுத்தம்.. சரக்கு வாகனங்கள்  மிரட்டல்
லாரிகள்

அனைத்து இந்திய மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எம்.டி.சி.) விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: டீசல் விலையைக் குறைக்க வேண்டும், இ-வே பில் நடைமுறையில் உள்ள சிக்கல்களை தீர்த்தல், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை அழிக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்தும் முன் எங்களுடன் ஆலோசிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடுத்த 14 நாட்களுக்குள் தீர்த்து வைக்கக் கோரி மத்திய அரசுக்கு 14 நாட்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

டீசல் விலை உயர்வு.. வேறு வழியில்லை வேலை நிறுத்தம்.. சரக்கு வாகனங்கள்  மிரட்டல்
ஏ.ஐ.எம்.டி.சி.


இந்த கோரிக்கைகளை மத்திய அரசு கனிவுடன் அணுக மறுத்தால், அல்லது பிரச்சினைகளை தீர்க்க சாதகமான நடவடிக்கை எடுக்கத் தவறினால், நிர்வாகக்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கையான வேலைநிறுத்தம் குறித்து அறிவிப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 95 லட்சம் டிரக்குகள், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பஸ்களை கொண்டது அனைத்து இந்திய மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.