ஆட்டை வெட்ட போறாங்க… காப்பாற்றுங்கள்! ஆட்சியருக்கு கடிதம் எழுதிய சிறுமி!!

 

ஆட்டை வெட்ட போறாங்க… காப்பாற்றுங்கள்! ஆட்சியருக்கு கடிதம் எழுதிய சிறுமி!!

செங்கல்பட்டில் தான் ஆசையாக வளர்த்த ஆட்டை கோவிலுக்கு பலி கொடுக்க போறாங்க, அதனை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள் என மாவட்ட ஆட்சியருக்கு சிறுமி ஒருவர் மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டை வெட்ட போறாங்க… காப்பாற்றுங்கள்! ஆட்சியருக்கு கடிதம் எழுதிய சிறுமி!!

மறைமலைநகர் அடுத்த கருநீலம் கிராமத்தில் வசித்து வரும் டில்லி பாபு, இவர் வீட்டில் வளர்த்துவரும் ஆடு ஒன்றை கோயிலுக்கு பலியிடவிருந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) கோவில் திருவிழாவில் பலியிட போவதாக இருந்த நிலையில் டில்லிபாபுவின் மகளான 17 வயது மகேஸ்வரி, தான் ஆசையாக வளர்த்து வந்த ஆட்டை கோயிலில் பலியிடுவதை தடுத்து, தன்னுடைய ஆட்டை காப்பாற்ற வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திற்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கடிதத்தை பார்த்த மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆட்டை பாதுகாக்க கால்நடை துறைக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடைத்துறையினர் நடத்திய விசாரணையில், நேர்த்திகடன் செலுத்துவதற்காக டில்லிபாபு வளர்த்து வந்த ஆட்டை சிறுகுன்றம் பகுதியில் உள்ள கோவிலில் ஒப்படைத்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமி மகேஸ்வரியின் ஆசைப்படி ஆட்டினை கோவிலில் வளர்க்க அவரின் தந்தை டில்லிபாபு ஒப்புக்கொண்டதால் தற்போது அந்த ஆடு கோவிலில் வளர்க்கப்பட்டு வருகிறது.