வரதட்சணை கொடுமை: மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

 

வரதட்சணை கொடுமை: மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

வரதட்சணை கொடுமையால் மாடியிலிருந்து கீழே குதித்து மனைவி தற்கொலை முயன்ற சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் செந்தில் நாதன். இவர் கடந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னி நாகநந்தினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். செந்தில் நாதன் மற்றும் அவரது தாய், தங்கை இணைந்து நாகநந்தினியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை கொடுக்க முடியவில்லை என்றால் தற்கொலை செய்துகொள் எனவும் வேறு திருமணம் செய்து கொள்ள போவதாகவும் செந்தில் நாதன் மிரட்டியதாக தெரிகிறது. கடந்த 25ஆம் தேதி நாக நந்தினியிடம் வேறு திருமணம் செய்துகொள்ளபோவதாகவும், இனி என்னுடன் பேச வேண்டாம் என செல்போனில் செந்தில் நாதன் கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நாகநந்தினி வீட்டின் 2வது மாடிக்கு சென்று மேலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் நாகநந்தினியின் இரண்டு கால்கள் உடைந்தது.

வரதட்சணை கொடுமை: மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்!

இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நாக நந்தினியை சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய செந்தில் நாதன், தாயார் வசந்தகுமாரி, தங்கை சீதாலட்சுமி ஆகியோர் மீது 498(ஏ)- கணவர், கணவரின் உறவினர்களால் இழைக்கப்படும் கொடுமைகள், 306- தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை தடைச் சட்டம் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். கடலூர் பகுதியில் தலைமறைவாக இருந்த கணவர் செந்தில் நாதனை கடலூர் சென்று திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சென்னை கொண்டு விசாரித்து வருகின்றனர்.