காதலால் பரிதவிக்கும் பெண்! அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் வீட்டின் முன் தர்ணா!

 

காதலால் பரிதவிக்கும் பெண்! அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் வீட்டின் முன் தர்ணா!

திருவள்ளூர் அருகே அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் வீட்டின் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதலால் பரிதவிக்கும் பெண்! அதிமுக ஊராட்சிமன்ற தலைவர் வீட்டின் முன் தர்ணா!

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே அயத்தூர் ஊராட்சிமன்றத் தலைவராக இருந்து வருபவர் தேவிதாஸ். அதிமுக ஊராட்சி மன்ற தலைவரான இவருக்கு வினோத் என்ற மகன் உள்ளார். வினோத் அதே பகுதியை சேர்ந்த மாலினி( 21) என்ற பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதற்கு ஊராட்சி மன்ற தலைவரான தேவிதாஸ் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வினோத்தும் மாலினியும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தன் தாய்,தந்தையை சமாதானம் செய்துவிட்டு வருவதாக வினோத் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வினோத்தின் நடவடிக்கைகள் மாறியதாக மாலினி குற்றஞ்சாட்டுகிறார். மேலும் தனக்கு உன்னுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என வினோத் மாலினியிடம் கூறியதாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி இளம் பெண் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்து வந்த செவ்வாப்பேட்டை காவல்துறையினர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி ஞானசெல்வி நேரில் சென்று வினோத் மற்றும் மாலினி வீட்டாரிடம் விசாரணை நடத்தி கணவனின் தந்தை வீடான ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் தங்க வைத்து சென்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாலினி, “நான் ஏழ்மையாக இருப்பதால் கணவரின் பெற்றோர் ஊராட்சிமன்ற தலைவர் என்ற அதிகாரத்தில் தன்னை வாழவிடாமல் செய்கின்றனர், யாருக்கும் தெரியாமல் தன் கணவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர்” என தெரிவித்தார்.