புதுமாப்பிள்ளையை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்: அதிர்ச்சி சம்பவம்!

 

புதுமாப்பிள்ளையை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்: அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் மனோ கார்த்திக். இவர் ஒரு கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒணாக்கல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு விற்பனை பணத்தை உரிமையாளரிடம் கொடுப்பதற்காக மனோ கார்த்திக் தனது நண்பர் மணிபாரதி உடன் சென்றிருக்கிறார்.

புதுமாப்பிள்ளையை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்: அதிர்ச்சி சம்பவம்!

பணத்தைக் கொடுத்து விட்டு வீடு திரும்பும் போது அவரை காரில் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், திடீரென வழிமறித்து மனோ கார்த்திக்கை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணிபாரதி, கத்தி கூச்சலிட்டு உள்ளார். உடனே அங்கு கூடிய பொதுமக்கள், மனோ கார்த்திக்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுமாப்பிள்ளையை அரிவாளால் சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்: அதிர்ச்சி சம்பவம்!

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மனோ கார்த்திக்கை கொல்ல முயன்றதன் காரணம் என்ன? முன்விரோதமா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டா மாவட்ட எஸ்.பி திஷாமிட்டல், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். நடுரோட்டில் வாலிபரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.