கேஸை திறந்துவிட்டு மகள்களை கொல்ல முயன்ற தந்தை… கதறிய மனைவி பூட்டை உடைத்து காப்பாற்றிய போலீஸ்

 

கேஸை திறந்துவிட்டு மகள்களை கொல்ல முயன்ற தந்தை… கதறிய மனைவி பூட்டை உடைத்து காப்பாற்றிய போலீஸ்

புகார் கொடுத்ததால் மனைவி மீதான கோபத்தில் பிள்ளைகளை வீட்டில் பூட்டி கேஸ் பற்ற வைக்க முயன்ற கணவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். பிள்ளைகளை உயிரோடு எரிக்க முயன்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நொளம்பூர் ஏரி ஸ்கீம் 6வது தெரு பகுதியில் வசித்து வரும் மாயவன் – அமுதா தம்பதிக்கு சென்னை நொளம்பூர் ஏரி ஸ்கீம் 6வது தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் மாயவன் – அமுதா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அமுதா புகார் கொடுத்தார். அதில், “தன்னை தனது கணவர் கொடுமைப்படுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் அமுதா வீட்டிற்கு சென்று விசாரணை செய்யனர். அப்போது, தனது இரண்டு மகள்களோடு வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்ட மாயவன் கேஸ் சிலின்டரை நடு வீட்டில் வைத்து திறந்து வைத்துக் கொண்டு கொளுத்திக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு ஜெ.ஜெ நகர் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். 3 பேரையும் காவல்துறையினர் மீட்டனர். இதனிடையே, மனைவி மீது இருந்த கோபத்தில் வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுப்பட்டார். பின்னர் மாயவனை காவல் நிலையம் அழைத்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.