சீர்காழி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்!

 

சீர்காழி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்!

பழையார் கடற்கரையில் இறந்து போன திமிங்கலம் கரை ஒதுங்கியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் கடற்கரை இருக்கிறது. அந்த கடற்கரையில் இன்று காலை இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அவ்வழியே சென்ற கிராம மக்கள், உடனடியாக கடலோர காவல்படைக்கு தகவல் அளித்துள்ளனர்.

சீர்காழி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்!

விரைந்து வந்த காவல்படை அதிகாரிகள், திமிங்கலத்தின் உடலை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். கரை ஒதுங்கிய திமிங்கலத்தில் எடை 4 டன் இருக்கும் என்றும் அதன் நீளம் 12 அடி இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திமிங்கலம் உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினரும் கடலோர காவல்படையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து கிடக்கும் அந்த திமிங்கலத்தை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.