பாத்திரத்தை காட்டினாலே பாலை கொடுக்கும் விநோத பசு!

 

பாத்திரத்தை காட்டினாலே பாலை கொடுக்கும் விநோத பசு!

பாத்திரதை வைத்தால் காலை, மாலை என இரு வேலையிலும் தானாக பால் தரும் அதிசிய பசு கடலூரில் உலாவருகிறது.

திருமானிக்குழி கிரமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், தனியார் சர்க்கரை ஆலையில் அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். அந்த பணி பிடிக்காததால் வேலையை விட்டு விட்டு கிராமத்திற்கே வந்து இயற்கை விவாசாயம் செய்து வருகிறார். மேலும் தனது தாய் தந்தையுடன் சேர்ந்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். கால்நடைகளிடமிருந்து கழிவுகளை பெற்று நிலத்தில் உரமாக்கி வருகிறார்

பாத்திரத்தை காட்டினாலே பாலை கொடுக்கும் விநோத பசு!

இந்நிலையில் இவர் வைத்து இருக்கும் பசு கடந்த 25 நாட்களுக்கு முன்பு கன்று ஒன்று ஈன்றுள்ளது. அந்நாளில் இருந்து தினமும் காலை, மாலை வேலையில் அதன் அருகே பாத்திரை கொண்டு சென்றால் தானாகவே பாத்திரத்தில் நிரப்புகிறது. கன்றுக்கும் தேவையான பாலை கொடுக்கிறது. பாத்திரை காண்பித்தாலே தானாக பால் கொடுக்கும் இந்த அதிசய பசுமாட்டை அக்கிராம மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.