அழுகிய நிலையில் காட்டுப் பகுதிக்குள் சடலமாக கிடந்த காதல் ஜோடி; திருமணத்துக்கு பெற்றோர் சம்மதித்தும் விபரீத முடிவு ஏன்?

 

அழுகிய நிலையில் காட்டுப் பகுதிக்குள் சடலமாக கிடந்த காதல் ஜோடி; திருமணத்துக்கு பெற்றோர் சம்மதித்தும் விபரீத முடிவு ஏன்?

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மோப்பிரிப்பட்டியை சேர்ந்த சவுரிநாதன் என்பவரின் மகள் சோபியா(21). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பரதநாட்டியம் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜா என்பவரின் மகன் ஆனந்தராஜ்(22). இவர்கள் இரண்டு பேரும் உறவினர்களாம். சோபியாவும் ஆனந்தராஜும் பழகி வந்ததில், அவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. இரு வீட்டாருக்கும் தெரியாமலேயே பழகி வந்த இவர்களின் காதல், ஒரு கட்டத்தில் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ளது.

அழுகிய நிலையில் காட்டுப் பகுதிக்குள் சடலமாக கிடந்த காதல் ஜோடி; திருமணத்துக்கு பெற்றோர் சம்மதித்தும் விபரீத முடிவு ஏன்?

உறவினர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பின்னால் இருக்கும் காட்டுப் பகுதியில் ஆனந்தராஜூம், சோபியாவும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டு சடலமாக கிடந்துள்ளனர். அந்த வழியே சென்ற ஊர்மக்கள் சடலங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், அவர்களது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதித்த நிலையிலும் இந்த காதல் ஜோடி ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற விவரம் இன்னும் தெரிய வரவில்லை. விசாரணை முடிந்தால் தான் அவர்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது தெரிய வரும்.