‘சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க’ ஆணையம் அமைக்கப்படும்!

 

‘சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க’ ஆணையம் அமைக்கப்படும்!

தமிழகத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க பிரத்தியேக ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பான முதல்வரின் அறிக்கையில், சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர் என்றும் தமிழ்நாடு முழுவதும் சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரித்தால் மட்டுமே முழு தகவல்கள் கிடைக்கப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 69% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள இந்த புள்ளிவிவரம் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘சாதி வாரியான புள்ளி விவரங்களை சேகரிக்க’ ஆணையம் அமைக்கப்படும்!

இது குறித்து பேசிய வைகைச் செல்வன், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை பின்பற்றவே ஆணையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுருப்பதாக தெரிவித்துள்ளார். சாதி அடிப்படையிலான புள்ளி விவரங்களை சேகரிக்க அமைக்கப்படவிருக்கும் ஆணையம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.