ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!

 

ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!

மதுரை அருகே 12 ஆவது படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 8 மாத கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள தென்பழஞ்சி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளரான வாலிபர் தங்கபாண்டி (27)க்கு, ஏற்கனவே திருமணமாகி 8 ஆண்டுகளாகிய நிலையில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். குழந்தை இல்லாத தங்கப்பாண்டி, தனக்கு திருமணமானதை மறைத்து பக்கத்து ஊரை சேர்ந்த 12 ஆவது படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் பழகி வந்துள்ளார்.

ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!

அடிக்கடி இரு சக்கர வாகனத்தில் பல்வேறு தனிமையான இடங்களுக்கு அழைத்து சென்று சிறுமியிடம் அத்துமீறியுள்ளார். இதனால் சிறுமி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என கூறப்படுகிறது. சிறுமியின் உடலில் மாற்றத்தை கண்டறிந்த பெற்றோர், இது குறித்து விசாரித்த போது அந்த சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வாலிபர் தங்கப்பாண்டியை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.