யாசகம் பெற்ற பணத்தில் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்த முதியவர்!

 

யாசகம் பெற்ற பணத்தில் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்த முதியவர்!

மதுரையில் பிச்சைக்காரர் யாசகம் பெற்ற 10 ஆயிரம் ரூபாயை இரண்டாம் கட்ட கொரோனா நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்க உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில், மனைவி இறந்தபின்பு பொது சேவையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற 10 ஆயிரம் பணத்தை கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக இன்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார். இந்நிலையில் இரண்டாம் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் நிதியை மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் வழங்க உள்ளார்.

பிச்சைக்காரர்
இதே போன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும் 10 ஆயிரம் நிவாரண நிதி வழங்கவுள்ளார். மேலும் இதே போன்று யாசகம் மூலம் கிடைக்கும் பணத்தை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் தலா பத்தாயிரம் ரூபாயை பூல்பாண்டியன் வழங்க  திட்டமிட்டுள்ளார். இவர் ஏற்கனவே யாசகம் பெற்று புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்துவருகிறார். பிச்சையெடுத்த பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.