கொரோனாவால் பாதித்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை.. சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சோகம்!

 

கொரோனாவால் பாதித்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை.. சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சோகம்!

இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் 2ஆம் இடத்தில் இருக்கும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,400ஐ கடந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அதிவேகமாக பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் அதிக அளவில் கர்ப்பிணி, முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எளிதில் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதித்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதித்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை.. சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சோகம்!

சென்னை சூளையை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டவுடன் அவர் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். அவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அம்மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், பிறந்து சில நிமிடங்களிலேயே அந்த குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்னர். இதனையடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதா என சோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.