பெற்றோர் கண்முன்னே மகன் தலைசிதறி உயிரிழந்த சோகம்
விராலிமலை அருகே சாலையை விட்டு 100 அடி தூரம் விலகி சென்று பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்துள்ளானதில் 4 ½ வயது சிறுவன் தலைசிதறி உயிரிழந்தான்.
தூத்துக்குடி மாவட்டம் அசோக் நகரைச் சேர்ந்தவர் பினோ டேவிட். தூத்துக்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர் சென்னையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக காரில் மனைவி, 4 ½ வயது மகன் மற்றும் தனது தாயாருடன் சென்று கொண்டிருந்தார்.
மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த இராமகவுண்டம்பட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு இறங்கி சுமார் 100 அடி தூரம் சென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இருப்பினும் 4 ½ வயது சிறுவனான ஹேன்சல் சம்பவ இடத்திலேயே தலைசிதறிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்முன்னே மகன் தலைசிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இருப்பினும் 4 ½ வயது சிறுவனான ஹேன்சல் சம்பவ இடத்திலேயே தலைசிதறிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்முன்னே மகன் தலைசிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.