ஆத்திரத்தில் அந்தரத்தில் தொங்கிய மனைவி -9வது மாடியில் கைநழுவிப்போன கணவனின் முயற்சி..அதிர்ச்சி வீடியோ

 

ஆத்திரத்தில் அந்தரத்தில் தொங்கிய மனைவி -9வது மாடியில் கைநழுவிப்போன கணவனின் முயற்சி..அதிர்ச்சி வீடியோ

கணவன் மீதுள்ள ஆத்திரத்தால் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குதிக்க முற்பட்ட மனைவியை ஓடி வந்து பிடித்திருக்கிறார் கணவன். கடைசிவரைக்கும் போராடியும் கணவனின் முயற்சி கைநழுவி போய்விட்டது. இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆத்திரத்தில் அந்தரத்தில் தொங்கிய மனைவி -9வது மாடியில் கைநழுவிப்போன கணவனின் முயற்சி..அதிர்ச்சி வீடியோ

உத்தரபிரதேசம் காசியாபாத் நகரில் உள்ள கிராசிங்ஸ் ரிபப்ளிக் ஏரியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 9வது மாடியில் வசித்து வந்த கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை நடந்திருக்கிறது. கடந்த 13ம்தேதி அன்றும் இருவருக்குள்ளும் சண்டை நடந்திருக்கிறது.

ஆத்திரத்தில் அந்தரத்தில் தொங்கிய மனைவி -9வது மாடியில் கைநழுவிப்போன கணவனின் முயற்சி..அதிர்ச்சி வீடியோ

கணவன் மீதுள்ள ஆத்திரத்தில் தற்கொலை செய்துகொள்ளப்போகிறே என்று சொல்லிவிட்டு 9வது மாடியில் குதிக்க முயன்றிருக்கிறார். உடனே கணவன் பதறியடித்துக்கொண்டு ஓடிவந்து, குதிக்கப்போன மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டார். தற்கொலை செய்ய குதித்துவிட்ட மனைவிக்கும் அப்போதூ பயம் வந்திருக்கிறது. எப்படியாவது காப்பாற்றுங்க என்று சத்தம் போட்டிருக்கிறார்.

திடீர் என்று சத்தம் போட்டதால் குடியிருப்பின் எதிர் பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்திருக்கிறார்கள். அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த மனைவியை மேலே தூக்க கணவன் பலத்த முயற்சி செய்திருக்கிறார். ஆனால் பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது. கை நழுவி விட்டது. அலறிக்கொண்டே 9வது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார் அப்பெண்.

ஆத்திரத்தில் அந்தரத்தில் தொங்கிய மனைவி -9வது மாடியில் கைநழுவிப்போன கணவனின் முயற்சி..அதிர்ச்சி வீடியோ

தலையில் பலத்த அடிபட்டுள்ளதால் ஆபத்தான நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்தரத்தில் தொங்கி சத்தம் போட்டபோது சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ வெளியாகி வைரலாகி பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.