பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வெளியேற்றப்படுவர் இவரே! – பிக் பாஸ்4

 

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வெளியேற்றப்படுவர் இவரே! – பிக் பாஸ்4

இறுதிப் போட்டிக்குச் செல்லும் டிக்கெட் யாருக்கு… அந்த டாஸ்க்குகள் குறித்த விவாதம் என நேற்றைய எப்பிசோட் சுவாரஸ்யமாகவே சென்றது. கமல்ஹாசன் வரும் நாள் என்பதால் போட்டியாளர்களும் உற்சாகமாக இருந்தனர்.

வெள்ளிக்கிழமை விடியற்காலை

முதன்நாள் ஆரம்பித்த கயிறு பிடிக்கும் டாஸ்க் விடியற்காலை வரை தொடர்ந்தது. ரம்யாவும் ஷிவானியும் ஒரு கையால் பிடித்தபடியே நொந்துகொண்டு நின்றனர். ஒருவர் மீது ஒருவர் பந்து வீசிக்கொள்ளும்படி பிக்கி சொன்னதும் இருவரும் மாறி மாறி அடித்துகொண்டனர். ரம்யாவுக்கு பந்து வீசுவதற்கு வாகாக இருந்தது. ஷிவானிக்கு அது சிரமம். ஆனாலும் இருவரும் நல்ல தோழிகள் என்பதால் ஒப்புக்கு அடித்துக்கொண்டார்கள்.

கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்தை இருவரும் நெருங்கினர். ரம்யாவுக்கு போட்டி ஆரம்பித்த அரை மணிநேரத்திலேயே முதுகுவலி இருப்பதாகச் சொன்னார். அதையும் பொறுத்துக்கொண்டு இவ்வளவு நேரம் இருந்தது ஆச்சர்யம்தான். இருவரையும் குனிந்துகொண்டு பிடித்துக்கொள்ளச் சொன்னார். அதுதான் கஷ்டமானது. ரம்யா ஒரு கட்டத்தில் போட்டியிலிருந்து விலகினார். ஷிவானி வென்றார்.

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வெளியேற்றப்படுவர் இவரே! – பிக் பாஸ்4

இருவரும் தொப்பென்று தரையில் விழுந்தார்கள். உடனிருந்து போட்டியாளர்கள் கவனித்துக்கொண்ட விதம் பாராட்டத்தக்கது. ஷிவானியை தூக்கிக்கொண்டு சென்று படுக்கையில் கிடத்தினார் பாலா. ரம்யாவை தூக்கி வந்தார் சோம். ரம்யா – ஷிவானி இருவரும் வலியால் துடித்தனர். பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனில் கொடுக்கப்பட்ட மிக சிரமமான டாஸ்க் இதுதான். ஆனால், ஆண்கள் ஈகோ, சண்டை என கயிற்றை விட்டது அபத்தம்.

வெள்ளிக்கிழமை

வழக்கம்போல வெள்ளிக்கிழமை குறைவான காட்சிகளே காட்டப்பட்டன. பாயிண்ட் டேபிளில் பாலாவுக்கு கடைசி இடம் இருந்தது ஆரிக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தியது. அதனால் அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டார். நான் உன்னை அப்படிக் கேட்கலைன்னா நீ இன்னும் ரொம்ப நேரம் நின்னிருப்ப என்று அழுது வடிந்தார். இந்த டாஸ்க் மட்டுமல்ல, பல டாஸ்க்குகளில் பாலா, ஆரி இருவரால் அந்த டாஸ்க்கே வீணாகியிருக்கிறது.

அதன்பின்னும் மனமுருகி பாலா மன்னிப்பு கேட்டார் ஆரியிடம். நிஜமாகவே திரைப்படத்தில் நல்ல காட்சியைப் பார்ப்பதுபோலிருந்தது. ஆனால், இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. அதற்கு பாலா மாறலாம். ஆரியின் தயாளன் நான் எனும் மனப்பான்மை முருங்கை மரம் ஏறலாம்.

சனிக்கிழமை – கமல் வருகை

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வெளியேற்றப்படுவர் இவரே! – பிக் பாஸ்4

இறுதிப்போட்டி டிக்கெட் வென்ற சோம்க்கு டிக்கெட் வழங்கல், போஸ்டர் திறப்பு ஆகிய வைபங்களை காணொலி வாயிலாக முடித்து வைத்தார். ஒவ்வொருவரும் சோம் பற்றி பேச வேண்டுமாம். ரம்யா, ஆரி வென்றிருந்தால் மாற்றுக்கருத்துகளைச் சொல்லியிருப்பார்கள். ஆனால், சோம் வென்றதால் எல்லோருமே ‘நல்ல மனம் வாழ்க’ என்று வாழ்த்தி அமர்ந்தனர்.

நீண்ட நேரம் கயிற்றைப் பிடித்துக்கொண்டு நின்ற ரம்யாவுக்கும் ஷிவானிக்கும் பாராட்டுகளைச் சொன்னார் கமல். ’ஏன் அழுதீர்கள்?’ என இருவரிடம் கேட்டார் கமல். ‘சிங்கப்பெண்ணே பாடல் தேக்கி வைத்திருந்த கண்ணீரை வெளியே கொண்டு வந்துவிட்டது என்றனர் இருவரும்.

ஆரியும் பாலாவும் நெக்குருகி பேசிக்கொண்டிருந்த காட்சியை சிலாகித்தார் கமல். ‘இந்த சீசனில் ஒன்றுமே நடக்கல என்கிறார்கள். இப்படியான மாற்றம் நடந்திருக்கிறது’ என சீசன் 4- மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் சொல்லிட்டு இருந்தார். பிறகு திருக்குறள், ஆத்திசூடி டாஸ்க் பற்றி கமல் இவ்வளவு சிலாகித்து பேசியதைப் பார்த்தால் அந்த ஐடியாவே கமலுடையதுதான் போலிருக்கு. ஓஹோ!

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வெளியேற்றப்படுவர் இவரே! – பிக் பாஸ்4

போட்டியாளர்களும் திருக்குறள் படித்து வாழ்க்கையில் முன்னேறினேன் என்று பள்ளி மேடையில் சொல்லும் சிறுவர்கள் போல சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆஹா… ஓஹோ என கைத்தட்டி ரசித்தார் கமல். இப்போதான் இதெல்லாம் ஸ்கிரிப்ட்தானோ என்ற டவுட் வருது சாரே!

சின்ன பொண்ணு.. ஈஸி டார்கெட் என நினைத்து கேபியைப் போட்டிப் போட அழைத்தார் பாலா. ஆனா, அவர் அதிரடியாக விளையாண்டு வீழ்த்தி விட்ட கதையை சிலாகித்து பாராட்டினார் கமல்.

பிறகு என்ன யாரையாவது ஒருவரைக் காப்பாற்றும் சம்பவம் நடக்கும். சனிக்கிழமை என்றால் ஆரியைக் காப்பாற்றுவது தொடர்கதைதான். ஆரி ஆர்மி வெறிகொண்டு ஓட்டுப் போட்டிருக்கும். அதேபோல ஆரி காப்பாற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டில் கடைசியாக வெளியேற்றப்படுவர் இவரே! – பிக் பாஸ்4

கமல் விடைபெற்றதும் ஆரி தனது சொற்பொழிவை பாலாவிடம் ஆரம்பித்தார். ரொம்ப நேரம் போகும்போல இருக்கே என்று நினைத்த பாலா கைக்கொடுத்து அதை முடித்து வைத்தது அழகு.

இன்றைய எப்பிசோட்டில் பிக்பாஸ் சீசன் 4-ல் கடைசி எவிக்‌ஷன் நடக்க இருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி ஷிவானியே வெளியேற்றப் படவிருக்கிறார். ஆரி ஆர்மி இந்த வாரம் ஆரிக்கு மட்டுமே ஓட்டு என நினைத்ததால் இந்த முடிவு போல. இல்லையெனில் திட்டமிட்டு ரம்யாவை வெளியேற்றியிருப்பார்கள்.