94 ஆயிரம் பேர் வந்தனர்… 30 ஆயிரம் பேர் மட்டுமே சிக்கினர்! – பஞ்சாப் முதல்வர் அதிர்ச்சி தகவல்

 

94 ஆயிரம் பேர் வந்தனர்… 30 ஆயிரம் பேர் மட்டுமே சிக்கினர்! – பஞ்சாப் முதல்வர் அதிர்ச்சி தகவல்

பஞ்சாப் மாநிலத்துக்கு சமீப காலத்தில் வெளிநாடுகளில் இருந்து 94 ஆயிரம் பேர் வந்ததாகவும் அவர்களில் 30 ஆயிரம் பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை அம்மாநில முதல்வர் வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. பஞ்சாபில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கே பால், மளிகை பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங், “சமீப காலத்தில் மட்டும் பஞ்சாப் மாநிலத்துக்கு 94 ஆயிரம் வெளிநாட்டினர், வௌிநாட்டு இந்தியர்கள் வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் பேரைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறோம். மற்றவர்கள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அவர்களைத் தேடி வருகிறோம். தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது” என்றார்.