93 வயதிலும் நீதிமன்றம் சென்ற கருணாநிதி… பயந்து பதுங்கும் ரஜினி! – வேல்முருகன் விளாசல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறிருப்பது அவரது ரசிகர்களை அசிங்கப்படுத்தும் செயல் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நேரில் ஆஜராகாமல் இருக்க விலக்கு அளிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறிருப்பது அவரது ரசிகர்களை அசிங்கப்படுத்தும் செயல் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு வேல்முருகன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “பல லட்சக்கணக்கான மக்களின் மனங்களைக் கவர்ந்த கருணாநிதி தன்னுடைய 93வது வயதிலும் நீதிமன்றம் சென்றபோது, ஒரு நடிகர் விலக்கு கேட்பது அபத்தமானது, ஏற்றக்கொள்ள முடியாத ஒன்று. ஆஜராக முடியாது என்பதற்கு அவர் கூறிய காரணம் அவருடைய ரசிகர்களை அவமானப்படுத்தும், அசிங்கப்படுத்தும் செயல்” என்றார்.
கடந்த 2016ம் ஆண்டு தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் விளக்கம் அளிக்க தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு வந்தார். ஆனால், ரஜினிகாந்த் தான் நேரில் ஆஜரானால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம், எனவே நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.