கைலாசா பெண்களைத் திருமணம் செய்து கொடுங்கள்! நித்தியானந்தாவுக்கு 90ஸ் கிட்ஸ் கடிதம்!!

 

கைலாசா பெண்களைத் திருமணம் செய்து கொடுங்கள்! நித்தியானந்தாவுக்கு 90ஸ் கிட்ஸ் கடிதம்!!

கைலாசாவில் உள்ள பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு நித்யானந்தாவுக்கு 90ஸ் கிட்ஸ்கள் கடிதம் எழுதியுள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நித்யானந்தா இன்று வரை தலைமறைவாக இருந்து வருகிறார். கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி வரும் நித்யானந்தா, அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து காவல்துறையினர் அறிந்தபாடில்லை. இந்த நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று கைலாசா நாட்டிற்கு தனி நாணயம், ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு அதிரவைத்தார் நித்யானந்தா. இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் பேசும் பொருளாக மாறியுள்ளது. இதனிடையே நித்யானந்தாவின் கைலாச நாட்டில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிகோரியும், உணவகம் நடந்த உரிமை கோரியும் பலரும் அவருக்கு கடிதம் எழுதுவருகின்றனர்.

கைலாசா பெண்களைத் திருமணம் செய்து கொடுங்கள்! நித்தியானந்தாவுக்கு 90ஸ் கிட்ஸ் கடிதம்!!

இந்நிலையில் அனுப்புநர், 90 கிட்ஸ், தமிழ்நாடு என்றும் பெறுநர், சுவாமி நித்யானந்தா, கைலாசா நாட்டு அதிபர், கைலாசா என்ற முகவரிக்கு எழுதும் அந்த கடிதத்தில், “சுவாமிஜி… 1990-ம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம். எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம்.

தயவுசெய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள் மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த கடிதத்திற்கு நித்தியானந்தா பதிலளிப்பாரா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.