“சிறுவனை புண்ணாக்கி ,மண்ணாக்கிட்டிங்களே..” -ஒன்பது வயதான சிறுவனுக்கு நண்பர்களால் நேர்ந்த கதி

 

“சிறுவனை புண்ணாக்கி ,மண்ணாக்கிட்டிங்களே..” -ஒன்பது வயதான சிறுவனுக்கு நண்பர்களால் நேர்ந்த கதி

ஒரு சிறுவனை பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

“சிறுவனை புண்ணாக்கி ,மண்ணாக்கிட்டிங்களே..” -ஒன்பது வயதான சிறுவனுக்கு நண்பர்களால் நேர்ந்த கதி

உத்தரபிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 வயதான சிறுவன் பிப்ரவரி 14 ஆம் தேதி, உள்ளூர் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக  வீட்டை விட்டு வெளியே சென்றான் .அப்போது அந்த சிறுவனோடு  அதே ஊரை சேர்ந்த இரண்டு வாலிபர்களும் சென்றார்கள் .அதன் பிறகு அந்த கண்காட்சி முடிந்ததும் அந்த இரு நண்பர்களும்  அந்த சிறுவனை அந்த இரவில் ஒரு மறைவான பகுதிக்கு தூக்கி சென்றனர் .

அதன் பிறகு அந்த சிறுவனை இருவரும் சேர்ந்து இயற்கைக்கு மாறான வகையில் பாலியல் கொடுமை செய்துள்ளார்கள் .பின்னர் அந்த சிறுவன் மயக்கமாகி கிடந்தான் .அதை பார்த்து பயந்து போன இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்கள் .இந்த  சிறுவன் கண்விழித்தால் தங்களை காமித்து கொடுத்து விடுவான் என்று பயந்தார்கள் .அதனால் அந்த சிறுவனை கழுத்தை நெரித்து கொன்றனர் .பின்னர் அவரின் உடலை ஒரு கோணிப்பையில் அடைத்து ,அந்த பையை ஒரு குளத்தின் பக்கம் தூக்கி வீசி சென்றுள்ளார்கள் .அதன் பிறகு அந்த சிறுவனின் பெற்றோர் தங்களின் மகனை இரண்டு நாட்களாக காணாததால் அவனை தேடி அலைந்தனர் .சிறுவன் எங்கும் கிடைக்காததால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார்கள்  .போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுவனை பற்றி அவனோடு சென்ற நண்பர்களை பிடித்து விசாரித்தார்கள் .அப்போது அந்த நண்பர்கள் அந்த சிறுவனை பலாத்காரம்  செய்து கொன்று அவனின் உடலை ஒரு கோணியில் வைத்து வீசி சென்றதை ஒப்புகொண்டனர்  .அதன் பிறகு சிறுவனை கொன்ற அவர்களை போலீசார் கைது செய்தார்கள்.

“சிறுவனை புண்ணாக்கி ,மண்ணாக்கிட்டிங்களே..” -ஒன்பது வயதான சிறுவனுக்கு நண்பர்களால் நேர்ந்த கதி