துறையூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பலி!

 

துறையூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பலி!

திருச்சி

துறையூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் 8ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கண்ணனூர் அடுத்த மருக்கலாம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் மதன் (13). இவர் அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.

துறையூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பலி!

இந்த நிலையில், நேற்று சிறுவன் மதன், அதே கிராமத்தை சேர்ந்த சின்னத்துரை என்பவருடன் சோளத்தட்டை ஏற்றுவதற்காக டிராக்டரில் சென்றுள்ளார். அந்த பகுதியில் உள்ள குளத்தின் கரையில் சென்றபோது, டிராக்டர் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில், டிராக்டரின் அடியில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்