வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் தங்க நகை, 6½ கிலோ வெள்ளி கொள்ளை : போலீசார் வலைவீச்சு!

 

வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் தங்க நகை, 6½ கிலோ வெள்ளி கொள்ளை : போலீசார் வலைவீச்சு!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வசித்து வரும் தம்பதி கார்மேகம்- ராஜாமணி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன் திருச்சியிலும் இளைய மகன் சிங்கப்பூரிலும் தங்களது மனைவியுடன் வசித்து வருகிறார்களாம். பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்த மூத்த மகன், தனது மனைவி ராதிகாவை பெற்றோருடன் விட்டு விட்டு திருச்சிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், ராதிகா தனது மாமியாருடன் துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் தங்க நகை, 6½ கிலோ வெள்ளி கொள்ளை : போலீசார் வலைவீச்சு!

அப்போது பூட்டிவிட்டுச் சென்ற கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்க்கையில், பீரோவில் இருந்த 80 சவரன் தங்க நகைகளும், 6½ கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து உடனே ராதிகா, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், வீட்டில் சோதனை செய்ததில் தடயத்தை அழிக்க மிளகாய்ப் பொடியை வீடு முழுவதும் கொள்ளையர்கள் தூவி விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அண்மையில், இதே போன்ற கொள்ளை சம்பவம் மற்றொரு வீட்டில் அரங்கேறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.