2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலை முயற்சி… சிறுமி பலியான சோகம்…

 

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலை முயற்சி… சிறுமி பலியான சோகம்…

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்றதில், சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அடுத்த அத்திவெட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (32). இவர்களுக்கு ஜீவ பிரணிதா(8), பிரகதீஸ்வரன் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று தமிழரசி தனது, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலை முயற்சி… சிறுமி பலியான சோகம்…

வீட்டில் மூவரும் மயங்கி கிடந்தை கண்ட அக்கம் பக்கத்தினர், அவர்களை உடனடியாக மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துமனையில் சிகிசைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், மேல் சிகிச்சைக்காக மூவரும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு ஜீவ பிரணிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தமிழரசி மற்றும் சிறுவன் பிரதீஸ்வரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.