8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது…

 

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது…

கோவை

கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

கோவை உக்கடம் லாரிபேட்டை பகுதியில் வசிப்பவர் ரிஸ்வான்(32). இவர் அந்த பகுதியில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், வீட்டின் அருகேயுள்ள கடை முன்பு, விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ரிஸ்வான் சிறுமியை தனது வீட்டிற்கு தூக்கிச் சென்று பாலியல் ரீதியதாக தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம்கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டனர். மேலும், ரிஸ்வானை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது…

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், கோவை மேற்கு மகளிர் காவல் நிலைய போலீசார் ரிஸ்வானை மீட்டு காவல்நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கு சிறுமியின் பெற்றோர் புகாரின் பேரில் ரிஸ்வான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.