ஆவடியில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!
Jun 9, 2020, 09:28 IST1591675121000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,562 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆவடி மாநகராட்சியில் கொரோனாவிற்கு ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ஆவடியில் ஒருவரும், பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதனால் ஆவடியில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதிப்பு 282 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.