காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்! 3 இந்திய வீரர்கள் பலி

 

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்! 3 இந்திய வீரர்கள் பலி

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணமடைந்தனர். மேலும் இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. அவர்களை ஒடுக்க இந்திய வீரர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதே நேரத்தில் உரி மற்றும் குரேஸ் பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகின்றன. இந்த தாக்குதலை தொடர்ந்து ஜம்முகாஷ்மீரின் எல்லை பகுதியில் பதற்றம் நீடித்துவருகிறது.

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்! 3 இந்திய வீரர்கள் பலி

கடந்த சில நாட்களாகவே இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் பாகிஸ்தான் அடிக்கடி சண்டையிட்டு வருகிறது. சாவ்ஜியன், கெரன் உள்ளிட்ட பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுவருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்துவருவது தொடர்கதையாகிவருகிறது.