தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி மேலும் 12 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று மேலும் 8 ஐஏஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தப் பிரிவு இயக்குநராக லில்லி, பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம், ஒழுங்கு துணை செயலராக அம்ரித், நிதித்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹரீஷ் தாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனந்த் குமார் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் லக்ஷ்மி பிரியா, வணிக வரி கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நார்ணவாரே மணிஷ் ஷங்கரோ, வணிக வரித்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.