75 வயது முதியவரால் 7 வயது சிறுமி பாலியல் வென்கொடுமை ! பாய்ந்தது போக்சோ சட்டம் !!

 

75 வயது முதியவரால் 7 வயது சிறுமி பாலியல் வென்கொடுமை ! பாய்ந்தது போக்சோ சட்டம் !!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் லக்கவராபு மண்டத்தில் உள்ளது ரங்கராயபுரம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் குற்றம்சாட்டப்பட்ட 75 வயது முதியவர். இவர் கடந்த புதன்கிழமையன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது குடிசை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.

ஆந்திராவில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 75 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் லக்கவராபு மண்டத்தில் உள்ளது ரங்கராயபுரம் கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் குற்றம்சாட்டப்பட்ட 75 வயது முதியவர். இவர் கடந்த புதன்கிழமையன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனது குடிசை வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.

andhra-abuse

பின்னர் அந்த சிறுமியை பாலில் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி அழத் தொடங்கினாள். இதை பார்த்த பக்கத்து வீட்டு சிறுவன் அக்கம் பக்கத்தினரை அழைத்தான். தகவல் அறிந்து வந்த பொதுமக்கள் அந்த முதியவரை பிடித்து அடித்து உதைத்தார்கள். பின்னர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து குற்றம்சாட்டப்பட்ட பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். இதற்கிடையே சிறுமி குணம் அடைந்து வியாழக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.