74 வயது மூதாட்டிக்கு இரட்டை குழந்தை!
ஆந்திராவில் 74 வயது மூதாட்டிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த 74 வயது மங்கையம்மா செயற்கை முறையில் குழந்தை பெற்றெடுக்க விருப்பப்பட்டுள்ளார். இதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையை அணுகிய மங்கையம்மா மருத்துவர் உமாசங்கரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
ஆந்திராவில் 74 வயது மூதாட்டிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த 74 வயது மங்கையம்மா செயற்கை முறையில் குழந்தை பெற்றெடுக்க விருப்பப்பட்டுள்ளார். இதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையை அணுகிய மங்கையம்மா மருத்துவர் உமாசங்கரிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதன் அடிப்படையில், மங்கையம்மாவின் கணவரிடம் இருந்து விந்தணுக்களையும், மற்றொரு பெண்ணிடம் இருந்து கருமுட்டையும் பெறப்பட்டு, கருவுறச் செய்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் கருவுற்ற மங்கையம்மா, இன்று அழகிய இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்திருக்கிறார். தாயும் சேயும் தற்போது முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தையே இல்லை என பலர் ஏங்கி இருக்க, 74 வயது மூதாட்டிக்கு செயற்கை முறையில் இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.