ஆம்பன் புயலுக்கு மே.வங்கத்தில் 72 பேர் பலி!

 

ஆம்பன் புயலுக்கு மே.வங்கத்தில் 72 பேர் பலி!

மேற்கு வங்கத்தை தாக்கிய ஆம்பன் புயல் காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் மிகத் தீவிரப் புயலாக மாறி மே 20ம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் கரையைக் கடந்தது. இதனால், பலத்த காற்று வீசியதில் பல கட்டிடங்கள் விழுந்தன, மரங்கள் வீடுகள் மீது விழுந்தன. இந்த புயல் காரணமாக 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆம்பன் புயலுக்கு மே.வங்கத்தில் 72 பேர் பலி!
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் நிவாரண நிதியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். புயல் பாதிப்பு பற்றி அவர் கூறுகையில், “இது போன்ற ஒரு பேரழிவை இதற்கு முன்பு நான் பார்த்து இல்லை. நிலைமையை நேரில் பார்வையிட பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” என்றார்.