71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை !
Sep 12, 2020, 09:35 IST1599883549000
71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிப்பதாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்கலைக்கழக இணைப்பு அனுமதிபெறாத மற்றும் அனுமதி ரத்து செய்யப்பட்ட 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 56 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு தடைபிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்கலை கழக இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட். கல்லூரிகளிலும் மாணவர்களை சேர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடையாளம் காணப்பட்ட 71 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்திருந்தால் பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது என்றும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.