வெளிநாட்டில் பிள்ளைகள் -உள்நாட்டில் முதியோர்கள் -கொலை செய்யும் கொள்ளையர்கள் -உஷார் !பணக்கார முதியவர்களை குறிவைக்கும் கூட்டம் …

 

வெளிநாட்டில் பிள்ளைகள் -உள்நாட்டில் முதியோர்கள் -கொலை செய்யும் கொள்ளையர்கள் -உஷார் !பணக்கார முதியவர்களை குறிவைக்கும் கூட்டம் …

முதியோர்களை விட்டு விட்டு பிள்ளைகள் வெளிநாடு சென்று விடுவதால் பல முதியோர்கள் ஆதரவின்றி வசிக்கிறார்கள் .இது பல கொள்ளையர்களுக்கு வசதியாகி போனதால் ,முதியோர் கொலைகள் நாட்டில் பெருகியுள்ளது .
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் செக்டர் 15 என்கிற ஏரியா மிக காஸ்ட்லியான பகுதி .இங்குதான் பல மால்களும் ,ரேடிசன் ஐந்து நட்சத்திர ஹோட்டலுமுள்ளது .இந்த பகுதியில் பல கோடி ரூபாயிருந்தாலும் வீடு வாங்க முடியாது ,அவ்வளவு பணக்காரர்கள் வசிக்கும் பகுதி அது .அந்த பகுதியில் வெளிநாட்டில் பிள்ளைகள் வசிப்பதால் ஒரு 70 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார் .

வெளிநாட்டில் பிள்ளைகள் -உள்நாட்டில் முதியோர்கள் -கொலை செய்யும் கொள்ளையர்கள் -உஷார் !பணக்கார முதியவர்களை குறிவைக்கும் கூட்டம் …
தனியாக தோட்டம் ,பூங்கா வசதியுடன் இருக்கும் அந்த வீட்டில் அந்த கோடீஸ்வர பாட்டி தனியாக ,யார் துணையுமின்றி வசித்தார் .இந்நிலையில் கடந்த வாரம் அந்த பாட்டி திடீரென குளியலறையில் இறந்து கிடந்தார் .அவர் இறந்த தகவல் வேலைக்காரர்கள் மூலம் போலீசுக்கு தெரிய வந்ததில் ,போலீசார் சென்று உடலை கைப்பற்றி பரிசோதனை செய்ததில் ,அவருக்கு தலையில் பலத்த காயமிருந்தது .இதனால் போலீசார் அவரை யாரோ சொத்துக்காக கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் .

வெளிநாட்டில் பிள்ளைகள் -உள்நாட்டில் முதியோர்கள் -கொலை செய்யும் கொள்ளையர்கள் -உஷார் !பணக்கார முதியவர்களை குறிவைக்கும் கூட்டம் …
இதனால் போலீசார் அந்த வீட்டுக்கு யாரெல்லாம் வந்தனர் ,என்று சிசிடிவி கேமெரா காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர் .மேலும் அந்த வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர்களையும் விசாரித்து வருகின்றனர் .வீட்டில் நகை ,பணம் எதுவும் கொள்ளையடிக்கப்படாததால் இது அவரின் உறவினர் யாரோ சொத்துக்களை கைப்பற்ற செய்த சதியாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர் .