‘சிறுவனின் உயிரை பறித்த மின்சாரம்’.. 7 வயது சிறுவன் பரிதாப பலி!

 

‘சிறுவனின் உயிரை பறித்த மின்சாரம்’.. 7 வயது சிறுவன் பரிதாப பலி!

கொரோனா பாதிப்பு தமிழகத்தை புரட்டி போட்டு வருகிறது. பல மாதங்களாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. எப்போது இந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். இந்த கொரோனா பாதிப்பு ஒரு புறமிருக்க மறு புறம் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் மரணம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் சென்னை சூளைமேட்டில் இரவில் கழிப்பறை சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.

‘சிறுவனின் உயிரை பறித்த மின்சாரம்’.. 7 வயது சிறுவன் பரிதாப பலி!

இதனைத்தொடர்ந்து இன்று மின்சாரம் தாக்கியதால் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. ராமநாதபுரம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரத்தில் வசிக்கும் 7 வயது சிறுவன் அழகர், விளையாடிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுவனை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் எப்படி மின்சார தாக்குதலுக்கு உள்ளானான் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகிறது. சமீப காலமாக குழந்தைகள் மரணம் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் பெற்றோர்களின் அலட்சியம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.