7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

 

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

கோவை

கோவை மாவட்டம் வடவள்ளியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலி தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் 7 வயது சிறுமி. நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மாயமாகினார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை தேடினர்.

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது!

அப்போது, சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நாகராஜ் (31) என்பவர், ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, சிறுமியை மீட்ட பெற்றோர், இதுகுறித்து வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் நாகராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.