திருவள்ளூர் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!

 

திருவள்ளூர் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே குளியல் அறையில் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த அதிகத்தூர் மேட்டுகண்டி பகுதியை சேர்ந்தவர்கள் விநாயகம் – நிஷாந்தி தம்பதியினர். இவர்களது மகன் அபினேஷ் (7). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை குளிப்பதற்கு சிறுவன் அபினேஷ், வீட்டின் குளியல் அறைக்கு சென்றார்.

திருவள்ளூர் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!

அப்போது, அங்கு பக்கெட்டில் தண்ணீரை சூடு செய்வதற்காக வைக்கப் பட்டிருந்த வாட்டர் ஹீட்டரில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதால், அபினேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த அபினேஷை, பெற்றோர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த திருவள்ளூர் கிராமிய போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விநாயகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.