‘நள்ளிரவில் தொடர் கொள்ளை’ 7 பேர் கொண்ட கும்பல் கைது: 39 சவரன் நகை பறிமுதல்!

 

‘நள்ளிரவில் தொடர் கொள்ளை’ 7 பேர் கொண்ட கும்பல் கைது: 39 சவரன் நகை பறிமுதல்!

கடலூர் அருகே தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சிறுப்பாக்கம் சோதனைச் சாவடியில் காவலர்கள் வழக்கம் போல வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியே வந்த பேருந்தை காவலர்கள் சோதனை செய்ய நிறுத்திய போது, பேருந்தில் இருந்த 4 பேர் மூட்டைகளுடன் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார், அவர்களிடம் இருந்த மூட்டைகளை பரிசோதித்து பார்த்த போது அதில் கத்தி, கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்துள்ளது.

‘நள்ளிரவில் தொடர் கொள்ளை’ 7 பேர் கொண்ட கும்பல் கைது: 39 சவரன் நகை பறிமுதல்!

இதனால் அவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் 13 திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்றும் அவர்கள் நகையை திருடி மோட்டூர் பகுதியில் வசிக்கும் உறவினர்களிடம் கொடுத்து நகையை விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. அந்த தகவலின் பேரில், நகைகளை விற்கும் 3 பேர் கொண்ட கும்பலையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

‘நள்ளிரவில் தொடர் கொள்ளை’ 7 பேர் கொண்ட கும்பல் கைது: 39 சவரன் நகை பறிமுதல்!

மேலும், அவர்களிடம் இருந்து 39 சவரன் தங்க நகைகள் மற்றும் 1 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.