டாஸ்மாக் கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு; ஓட்டம்பிடித்த மதுப்பிரியர்கள்

 

டாஸ்மாக் கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு; ஓட்டம்பிடித்த மதுப்பிரியர்கள்

திருவள்ளூர்

திருத்தணி அருகே டாஸ்மாக் கடைக்குள் சுமார் 7 அடி நீளமுடை சாரைப்பாம்பு புகுந்ததால், கடை ஊழியர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான மது பிரியர்கள், மதுவாங்க வரிசையில் காத்திருந்தனர். அப்போது, டாஸ்மாக் கடைக்குள் திடீரென 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று புகுந்தது.

டாஸ்மாக் கடைக்குள் புகுந்த சாரைப்பாம்பு; ஓட்டம்பிடித்த மதுப்பிரியர்கள்

இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் மற்றும் மது பிரியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. இதனால் மதுபான கடையில் சுமார் ஒரு மணி நேரம் விற்பனை பாதிக்கப்பட்டது.