கொலை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

 

கொலை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 7 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.கடந்த மாதம் தென்திருப்பேரை பகுதியில் ராமையா தாஸ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாரி, செல்வம், சோமு ஆகிய 3 பேரை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் வாழ்வாங்கி என்பவர் படுகொலை செய்யபட்ட சம்பவத்தில் பிரசாத், அந்தோணி, வினோத், ஆனந்த் ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்

கொலை வழக்குகளில் தொடர்புடைய 7 பேர், குண்டர் சட்டத்தில் அடைப்பு

இந்த நிலையில், மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக, இரு வழக்குகளிலும் தொடர்புடைய 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. ஜெயகுமார் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவின் படி, 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். நடப்பு ஆண்டு போதை மருந்து கடத்தல் வழக்கு தொடர்பாக 8 பேர் உள்பட இதுவரை 118 பேர் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.