மலைக்க வைக்கும் மனிதநேயம்.. குழந்தைக்காக 7 நாளில் 18 கோடி குவிந்தது

 

மலைக்க வைக்கும் மனிதநேயம்.. குழந்தைக்காக 7 நாளில் 18 கோடி குவிந்தது

ஒன்றைரை வயது கேரள குழந்தைக்காக 7 நாளில் 18 கோடி குவிந்திருப்பதால் இது மனிதநேயத்தின் உச்சம் என்று போற்றப்படுகின்றது.

மலைக்க வைக்கும் மனிதநேயம்.. குழந்தைக்காக 7 நாளில் 18 கோடி குவிந்தது

கேரள மாநிலத்தின் கன்னூரைச் சேர்ந்த ரபிக் -மரியும்மா தம்பதிக்கு பிறந்த முஹம்மது என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய் பாதிக்கப்பட்டது.

முஹம்மதுவின் மூத்த சகோதரிக்கு அப்ராவும்( 15) இதே பாதிப்பினால் சிகிச்சை பெற வழியில்லாமல் சக்கர நாற்காலியில் உட்கார வேண்டிய நிலை இருக்கிறது.

இந்நிலையில் முகம்மதுவுக்கும் அப்படி ஒரு நிலை வந்து விடாமல் தடுக்க வேண்டுமென்றால் ஒன்றரை வயதாகும் அவர் இரண்டு வயது ஆவதற்குள் அவருக்கு உயர்ந்த மருந்து ஒன்றை கொடுத்தால் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

மலைக்க வைக்கும் மனிதநேயம்.. குழந்தைக்காக 7 நாளில் 18 கோடி குவிந்தது

அந்த உயர்ந்த மருந்து உலகிலேயே மிக விலை உயர்ந்த மருந்து என்றும், ஸோல்ஜென்ஸ்மா எனும் அந்த மருந்தின் விலை 18 கோடி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அத்தனை கோடிக்கு எங்கே போவது என்று புலம்பிய பெற்றோர்கள் பற்றிய நிலைமை அறிந்து ஒரு தொண்டு நிறுவனம் உதவ முன்வந்தது.

அந்த நிறுவனம் அறிவித்ததன் பெயரில் ஏழு நாட்களுக்குள் அந்த மருந்து வாங்குவதற்கான 18 கோடி திரண்டு விட்டது. அவர்கள் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கில் 18 கோடிக்கும் அதிகமாகவே வரவு வந்திருந்தது. அதனால் இனிமேல் யாரும் இந்த வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டாம் சிகிச்சைக்கான பணத்தை திரட்டி விட்டோம் என்று அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது.

ஏழு நாட்களுக்குள் 18 கோடி குவிந்ததால் குழந்தையின் பெற்றோர்கள் அளவில்லாத மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மனித நேயத்தை எண்ணி பலரும் வியந்து போய் இருக்கின்றனர்.