7 பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த மிரட்டிய ஆட்டோக்காரன் நண்பனாக நினைத்து மனம் விட்டு பேசிய பெண்களுக்கு நேர்ந்த துயரம்

 

7 பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த மிரட்டிய ஆட்டோக்காரன் நண்பனாக நினைத்து மனம் விட்டு பேசிய பெண்களுக்கு நேர்ந்த துயரம்

பொள்ளாச்சியில் மாணவிகளை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவத்தின் செய்தி அடங்குவதற்குள் அடுத்த வீடியோ சேலத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்  7 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பணம் பறித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

பொள்ளாச்சியில் மாணவிகளை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவத்தின் செய்தி அடங்குவதற்குள் அடுத்த வீடியோ சேலத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்  7 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து பணம் பறித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
மகுடஞ்சாவடியை சேர்ந்த மோகன்ராஜ் சொந்தமாக 2 ஆட்டோக்களை வைத்துள்ளார். 
இந் நிலையில் மோகன்ராஜ் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்து மீண்டும் படுக்கைக்கு அழைத்து மிரட்டுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

mohanraja

இதையடுத்து மோகன்ராஜை பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். மேலும் அவனுடைய செல்போனில், 7 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த வீடியோ காட்சிகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்தனர். வீடியோக்களில் 6 பேர் குடும்ப பெண்கள் என்பதும் ஒருவர் கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது.
ஆட்டோவில் வரும் பெண்களிடம் பேசிப் பழகி குடும்ப நிலவரத்தை தெரிந்து கொண்டு ஒருவேளை பண பிரச்சனையில் இருந்தால் அவர்களுக்கு பணம் கொடுத்து உதவுவது என்று இருந்துள்ளார் மோகன்ராஜ். நாளடைவில் அவர்களின் நம்பிக்கையை பெறும் மோகன் ராஜ் அவரை வீட்டிற்கு அழைத்து செல்வார். பின்னர் அவர்களை மிரட்டி அடித்து உதைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவார். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டு தான் விரும்பிய நேரத்தில் பெண்களை வீட்டுக்கு வரவழைத்து தனது ஆசையை தீர்த்துக் கொள்வது மோகன்ராஜின் வழக்கம். அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசிடம் புகார் அளிக்காமல் இருப்பதற்கு அரசியல் செல்வாக்கும் அடாவடியான நடவடிக்கைகளுமே காரணம் என பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

women

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்லூரி மாணவிகளை காதலிப்பது போல நடித்து தனிமையான இடத்துக்கு அழைத்து சென்று ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த சபரி அபிசேக் என்பவன் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒரு சம்பவம் சேலத்தில் அரங்கேறி உள்ளது.