7 அறை… ஏழரை… ப.சிதம்பரம் மகன் கார்த்தியின் அதிர்ச்சி தரும் அந்த ரகசிய விஷயங்கள்..!
கார்த்தியின் பிறந்தநாள் நவம்பர் மாதம் 16ம் தேதி. இதனால் ரெண்டு பேருக்குமே ராசியான நம்பர் ஏழு தான். இவர்களது குடும்ப வாகனங்களின் கூட்டு தொகை எல்லாமே ஏழு தான்.
ஐ.என்.எக்.ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
தொடர்ந்து சிபிஐ காவலில் வைக்கப்பட்ட சிதம்பரம் தற்போது சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் திகார் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தான் சிதம்பரத்திற்கும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கும் உள்ள எண் கணித ராசி ஒற்றுமை ரகசியங்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கி, டெல்லி திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்காரே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இவரது பிறந்த நாள் செப்டம்பர் 16ம் தேதி.
இவரது மகன் கார்த்தியின் பிறந்தநாள் நவம்பர் மாதம் 16ம் தேதி. இதனால் ரெண்டு பேருக்குமே ராசியான நம்பர் ஏழு தான். இவர்களது குடும்ப வாகனங்களின் கூட்டு தொகை எல்லாமே ஏழு தான்.
இந்த எண் ராசி ஜெயில் வரை தொடர்கிறது. தற்போது ப. சிதம்பரம் அடைக்கப்பட்டு இருப்பது 7ம் நம்பர் சிறை வளாகம். இதே ஜெயிலில் தான், இதற்கு முன் இவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் அடைத்திருந்தார்கள். அவரும் 7ம் நம்பரில் தான் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.