7ஆண்களை திருமணம் செய்த இளம்பெண்: அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

 

7ஆண்களை திருமணம் செய்த இளம்பெண்: அதிர வைக்கும் உண்மை சம்பவம்!

ஆந்திராவில் 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடப்பா: ஆந்திராவில் 7 பேரை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், கித்தலூரைச் சேர்ந்த மோனிகா என்ற இளம்பெண் பணக்கார ஆண்களைச் சந்தித்து, ஆசை வார்த்தைகளைக் கூறி திருமணம் செய்துகொள்வதும், அவர்களிடமிருந்து பணம் நகைகளைப் பெற்றுக்கொண்டு பின் கருத்து வேறுபாடு எனக்கூறிப் பிரிந்து விடுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.

அந்த வரிசையில் ஏழாவதாகக் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா ரெட்டியை திருமணம் செய்த மோனிகா, அவரிடம் பணம், நகைகளைப் பறிக்க முயன்றுள்ளார். இதுதொடர்பாக அந்த நபர் அளித்த புகாரின் பேரில் காஜிபேட்டை போலீசார் மோனிகாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏற்கெனவே இதுபோல ஏழு பேரை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, மோனிகாவை கைது செய்த போலீசார் அவருக்கு உடந்தையாக இருந்ததாக மோனிகாவின் தந்தை மற்றும் நண்பரையும் கைது செய்துள்ளனர்.