அதிகரிக்கும் சிறுமிகள் வன்கொடுமை… சொந்த பேத்தியை பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது!

 

அதிகரிக்கும் சிறுமிகள் வன்கொடுமை… சொந்த பேத்தியை பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது!

கொரோனா அச்சத்தால் என்ன செய்வதென்றே தெரியாமல் நாட்டு மக்கள் விழிபிதுங்கி வரும் நிலையிலும், சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. கடந்த சில நாட்களாக பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்களே இந்த கொடுமைகளுக்கு காரணமாக இருப்பது தான், சமூகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மீதான அச்சத்தை ஏற்படுத்துகிறது.

கோயம்புத்தூரில் 65 வயது முதியவர் ஒருவர் தனது ஏழு வயது பேத்தியை தொடர்ந்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த குற்றத்துக்காக சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் சிறுமிகள் வன்கொடுமை… சொந்த பேத்தியை பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது!

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அவர்கள் பகுதியிலுள்ள சந்தையில் வெங்காய வியாபாரம் செய்து வந்துள்ளனர். சிறுமி தனது 5 வயது சகோதரனுடன் வசித்து வருகிறார். பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் நேரம் இரு குழந்தைகளையும் தங்கள் தாத்தாவிடம் விட்டு விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். முதியவரின் மனைவியும் மகனும் கூட அன்றாடம் வேலைக்கு சென்றுவிடுவதால் முதியவர் தனியாகத்தான் வீட்டில் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய முதியவர் தனது பேத்தியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார .மேலும், இதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார். இப்படியே சில நாட்கள் தொடர்ந்து வந்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று, வழக்கம்போல சிறுமியின் பெற்றோர் தாத்தா வீட்டில் விட அழைக்கும்போது சிறுமி வர மறுத்துள்ளார். இதனால் குழம்பிய சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியிடம் காரணம் கேட்ட பொழுது சிறுமி நடந்ததைக் கூறியுள்ளார். நடந்த கொடுமையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர். பின்னர் அந்த முதியவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.