6 ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கைது!

 

6 ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கைது!

அரியலூரில் 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் கொடுமை செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் காலணி தெருவைச் சேர்ந்தவர் வெள்ளையன் (52). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ஆவார். மேலும் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் அடகு நகை நடத்திவருகிறார். இவர், தனக்கு மகள் முறையுள்ள 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை வீட்டை கூட்ட வேண்டுமெனக் கூறி வீட்டிற்குள் அழைத்துள்ளார். பக்கத்து வீட்டில் வசித்த சிறுமியும் வெள்ளையனை நம்பி வீட்டினுள் சென்றுள்ளார். சிறுமியை உள்ளே அழைத்த வெள்ளையன், அவருக்கு பாலியல் கொடுமை செய்துள்ளார்.

6 ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்த விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி கைது!

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வெள்ளையன் மீது வழக்குப்பதிவு செய்த தளவாய் போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.