ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் மூழ்கி 6வயது சிறுவன் பலி

 

ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் மூழ்கி 6வயது சிறுவன் பலி

சென்னை ஆவடி அருகே கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தார்.

சென்னை ஆவடி அடுத்த வெள்ளானூர் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் – சங்கீதா தம்பதியை சேர்ந்த மோகன்ராஜ் (6) என்ற சிறுவன் வெள்ளானூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவந்தான். அவரது வீட்டருகில் புதிதாக கட்டப்பட்டுவரும் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டி மூடப்படாமல் இருந்தது. இதனால் அதில் தேங்கிய மழைநீரில் கமலகண்ணன் தவறி விழுந்தான். விளையாடிக்கொண்டிருந்த மகனை காணாததால் சங்கீதாவும் மோகன்ராஜும் கமலகண்ணன் தேடி உள்ளனர். அப்போது அவன் கழிவுநீர் தொட்டியில் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தது தெரியவந்தது.

ஆவடியில் கழிவுநீர் தொட்டியில் மூழ்கி 6வயது சிறுவன் பலி

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி டேங்க் ஃபேக்டரி காவல் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்வம் தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.