சேலத்தில் கொலை, வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

 

சேலத்தில் கொலை, வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

சேலம்

சேலத்தில் காவல் நிலையம் அருகே இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 பேர் உள்பட 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் எடிசன் என்பவர் கொலை வழக்கில் கைதானவர் கோபிநாத்(28). இவர் கடந்த மாதம் 24ஆம் தேதி சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணை கையெழுத்து போட்டுவிட்டு திரும்பினார். அப்போது, காவல்நிலையம் அருகே வழிமறித்த மர்மநபர்கள் அவரை அறிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

சேலத்தில் கொலை, வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கொலை தொடர்பாக கீழக்கரையை சேர்ந்த கார்திக், ரமேஷ்குமார், விக்னேஷ், அருள்மணி, அந்தோனி ஆகிய 5 பேரை போலீசார் கைதுசெய்து, நீதிமன்ற காவலில் அடைத்தனர். இந்த நிலையில், சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரின் பரிந்துரையின் பேரில், 5 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவிட்டார். இதேபோல் சேலத்தில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த லால்குடியை சேர்ந்த கலைபுலி ராஜா என்பவரும் குண்டர் தடுப்பு காவலில் கைதுசெய்யப்பட்டார்.