கொரோனாவிலிருந்து தப்பிக்க 6 மருந்துகள்…சித்த மருத்துவர் சொல்லும் ரகசியம்!

 

கொரோனாவிலிருந்து தப்பிக்க 6 மருந்துகள்…சித்த மருத்துவர் சொல்லும் ரகசியம்!

கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 97ஆயிரத்து 672ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரேநாளில் 15,684 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 94பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,651ஆக அதிகரித்துள்ளது.இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை பின்பற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் தேசிய சித்த நிறுவனத்தின் இணை பேராசிரியர் மருத்துவர் ச.சிவகுமார். கொரோனாவிலிருந்து தப்பிக்க கடுக்காய் ஊறல் நீர், சீந்தில் பால், ஆயுஷ் குடிநீர், நெல்லிக்காய் தேனூறல், இஞ்சி கற்பம்,துளசி நீர் ஆகிய 6 சித்த மருந்துகளை உட்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க 6 மருந்துகள்…சித்த மருத்துவர் சொல்லும் ரகசியம்!

கடுக்காயை கொட்டையை நீக்கி பின் இடித்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் கடுக்காய் என்ற வீதத்தில் பொடியாக்கி ஊற வையுங்கள். 24 மணி நேரம் கடுக்காய் தண்ணீருடன் சேர்ந்து நன்கு ஊறிய பிறகு அதை நீங்கள் பருகலாம்.

*சீந்தில் தண்டை 50 கிராம் இடித்து பாலில் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க 6 மருந்துகள்…சித்த மருத்துவர் சொல்லும் ரகசியம்!

*சுக்கு,மிளகு ,லவங்கம், துளசி ஆகியவற்றை ஒன்றாக இடித்து நீரில் போட்டு கொதிக்கவைத்து அதை நன்றாக வடிகட்டி குடிக்கலாம்.

*நெல்லிக்காயை கொட்டை நீக்கி நறுக்கி தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வரலாம்.

கொரோனாவிலிருந்து தப்பிக்க 6 மருந்துகள்…சித்த மருத்துவர் சொல்லும் ரகசியம்!

*இஞ்சியை தோல் சீவி சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி ,நெய் சேர்த்து வதக்கி பின்பு அதை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*துளசியை தண்ணீரில் போட்டு அதை குடித்து வர கொரோனாவிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.

*அத்துடன் வேது பிடித்தல், மஞ்சள் உப்பு கலந்த நீரில் வாய் கொப்பளித்தல், கபசுரக் குடிநீர் பருகுதல், சத்தான உணவுகளை உண்ணுதல் மூலம் நாம் கொரோனா தொற்றில் இருந்து எளிதாக நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.