2 சிறுமிகளை 6 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : முதியவர் உள்பட 6 பேர் கைது!

 

2 சிறுமிகளை 6 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : முதியவர் உள்பட 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே இரண்டு சிறுமிகளை கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை நடந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 சிறுமிகளை 6 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : முதியவர் உள்பட 6 பேர் கைது!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 12 மற்றும் 13 வயதான சிறுமிகளை 6 மாதமாக வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக 75 வயது முதியவர் முத்துசாமி உட்பட 6 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவா, சூர்யா, சண்முகம், மணிகண்டன், செந்தமிழ்செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

2 சிறுமிகளை 6 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : முதியவர் உள்பட 6 பேர் கைது!

சமீபத்தில் திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி கிருபானந்தன் போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

2 சிறுமிகளை 6 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : முதியவர் உள்பட 6 பேர் கைது!

தனது மகளை யார் தான் கொன்றார்கள் என்று சிறுமியின் தாய், தந்தை கதறிய சுவடே இன்னும் மறையாத நிலையில் ராசிபுரம் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.