6 மாத கர்ப்பிணியைக் கைவிட்ட காதலன் : போலீசாரின் அறிவுரைக்குப் பின் நடந்த திருமணம் !

 

6 மாத கர்ப்பிணியைக் கைவிட்ட காதலன் : போலீசாரின் அறிவுரைக்குப் பின் நடந்த திருமணம் !

பெற்றோர் சூர்யாவை திருமணம் செய்து கொள்ளும் படி பிரதாப்பிடம் கெஞ்சியுள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் பச்சமலை பகுதியில் வசித்து வருபவர் பிரதாப். இவர் பத்தாம் வகுப்போடு தன் படிப்பை நிறுத்திவிட்டு வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அப்பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணும் இவரது காதலை ஏற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகு, இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளனர். பிரதாப்புடன் ஏற்பட்ட நெருங்கிய உறவால் சூர்யா கர்ப்பமாகியுள்ளார். 6 மாதம் வரை கர்ப்பமாக உள்ளதை சூர்யா அவளின் வீட்டில் இருக்கும் யாரிடமும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

pregnant

 சூர்யாவின் வயிறு பெரியதாக ஆரம்பித்ததால், சந்தேகமடைந்த பெற்றோர் அவளை மிரட்டி கேட்டுள்ளனர். அதன் பின்னர், சூர்யா தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சூர்யாவை திருமணம் செய்து கொள்ளும் படி பிரதாப்பிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத பிரதாப், சூர்யாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால், அப்பகுதி காவல் நிலையத்தில் பிரதாப் மீது சூர்யாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். 

mariage

பிரதாப் மற்றும் சூர்யா இருவருமே மேஜர் என்று அறிந்த காவல்துறையினர், பிரதாப்பை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளனர். யார் கூறியும் சூர்யாவைத் திருமணம் செய்து கொள்ள ஏற்றுக் கொள்ளாத பிரதாப் போலீசார் அறிவுரை வழங்கியதும் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்துள்ளார். அதன் பிறகு, அவர்கள் வீட்டின் அருகே உள்ள கோவிலில் வைத்து சூர்யாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.